Published : 16 Sep 2016 10:47 AM
Last Updated : 16 Sep 2016 10:47 AM
பல்வேறு துறைகளில் பொது மக்கள் அனுப்பிய 93 ஆயிரம் புகார்களுக்கு, ஒரு மாத காலத்துக் குள் தீர்வு வழங்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மத்திய பணியாளர் மற்றும் பொதுமக்கள் குறை தீர்வு துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும், 1 லட்சத்து, 903 புகார்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப் பட்டன. அதில், 93,379 அதாவது, 93 சதவீதம் மனுக்கள் ஒரு மாதத் துக்குள் தீர்த்துவைக்கப்பட்டன.
கடந்த 2 ஆண்டுகளாக புகார் மனுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அரசிடம் வழங்கும் மனுக்களால் தீர்வு கிடைக்கும் என்ற பொதுமக்களின் நம்பிக்கையையே இது காட்டுகிறது.
கடந்த 2014-ம் ஆண்டில், 2,70,255 மனுக்கள் பெறப்பட்டன. இதுவே கடந்தாண்டு 8,81,132 மனுக்களாக அதிகரித்துள்ளது. 2012-ம் ஆண்டில், 1,76,126 மனுக் கள் மட்டுமே பெறப்பட்டன.
தற்போது செயல்படுத்தப்படும் புதிய நடைமுறைகளின்படி, புகார் களின் உண்மைத்தன்மையை சோதிக்க, விளக்கங்கள் பெற, கள நிலவரத்தை தெரிந்துகொள்ள உடனுக்குடன் தொலைபேசி மூலமாகவே தொடர்புகொண்டு விடுகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT