Published : 20 Sep 2015 11:55 AM
Last Updated : 20 Sep 2015 11:55 AM
ஒடிசாவில் பாதுகாப்பு படையினருடன் நடைபெற்ற மோதலில் 3 மாவோயிஸ்ட்டுகள் நேற்று கொல்லப்பட்டனர்.
மாவோயிஸ்ட் நடமாட்டம் குறித்த ரகசியத் தகவலின் பேரில், மல்காங்கிரி மாவட்டம், மத்திலி பகுதி, பெஜாகுடா காட்டில் பாதுகாப்பு படையினர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது மாவோயிஸ்ட் பாதுகாப்பு படையினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருதரப்புக்கும் இடையில் சில மணி நேரம் நடைபெற்ற மோதலில் மாவோயிஸ்ட்டுகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட னர். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
கொல்லப்பட்டவர்கள் மாவோ யிஸ்ட் அமைப்பில் முக்கியப் பொறுப்பில் இருந்த சுனதாரா மற்றும் அவரது 2 பாதுகாவலர்கள் எனத் தெரியவந்துள்ளது.
ஒடிசாவின் மத்திலி பகுதி யிலும் அதை ஒட்டியுள்ள, சத்தீஸ்கர் மாநிலத்தின் தரபா பகுதியிலும் பல்வேறு குற்றச் செயல்களில் சுனதாரா ஈடுபட்டு வந்ததாக போலீஸார் கூறினர்.
மோதல் நடைபெற்ற இடத்திலிருந்து ஒரு துப்பாக்கி, வாக்கி டாக்கி, சீருடைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர். தப்பியோடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT