Last Updated : 16 May, 2016 10:32 AM

 

Published : 16 May 2016 10:32 AM
Last Updated : 16 May 2016 10:32 AM

ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை

எதிரி நாடுகளின் ஏவுகணையை இடைமறித்துத் தாக்கும் திறன் கொண்ட ஏவுகணையை இந்தியா நேற்று வெற்றிகரமாக பரிசோதித் துப் பார்த்தது.

ஒடிசா கடற்கரைக்கு அருகே வீலர் தீவில் (அப்துல் கலாம் தீவு) அமைந்துள்ள ஏவுதளத்திலிருந்து நேற்று காலை இந்த ஏவுகணை ஏவப்பட்டது.

முன்னதாக, எதிரி ஏவுகணை யாக கடற்படையின் பிருத்வி ஏவுகணையை, வங்காள விரிகுடாவில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலிலிருந்து சுமார் 11.15 மணிக்கு ஏவினர்.

அப்போது பிருத்வி ஏவுகணை வருவதை ராடார் மூலம் உணர்ந்த இடைமறிப்பு ஏவுகணை, விண்ணில் சீறிப் பாய்ந்து திட்டமிட்டபடி தாக்கி அழித்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தெரிவித்துள்ளது.

முற்றிலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக் கப்பட்ட, 7.5 மீட்டர் நீளம் கொண்ட இந்த ஏவுகணை உயர் தொழில்நுட்ப கம்ப்யூட்டர் உள்ளிட்ட அதிநவீன வசதிகளைக் கொண்டது. ஒலியை விட அதிவேகத்தில் விண்ணில் பாய்ந்து சென்று, எதிரி நாடுகளின் ஏவுகணையை தாக்கி அழிக்கும் சக்தி வாய்ந்தது.

இந்த ஏவுகணை வானில் பாயும்போது அதன் பல்வேறு அம்சங்கள் எப்படி உள்ளன என்பதை உறுதிப்படுத்திக் கொள்வ தற்காக இந்த சோதனை நடத்தப் பட்டதாகவும், சோதனை வெற்றி பெற்றதாகவும் டிஆர்டிஓ வட்டாரங் கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x