Published : 23 Jan 2015 08:52 PM
Last Updated : 23 Jan 2015 08:52 PM
ஷாரூக் கான், அமீர் கான், சயீஃப் அலி கான் ஆகிய பாலிவுட் நடிகர்களுக்கு இந்து மகாசபை சவால் விடுத்துள்ளது.
தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதியும் பேசியும் வரும் இந்து மகாசபை, தனது வாராந்திர பத்திரிகையான இந்து சபா வார்த்தா-வில் எழுதிய தலையங்கத்தில் ஷாரூக் கான், அமீர் கான், சயீஃப் அலி கான் ஆகியோர் உண்மையில் தங்கள் மனைவியை நேசிப்பவர்களாக இருந்தால் இந்து மதத்தைத் தழுவ வேண்டும் என்று சவால் விடுத்துள்ளது.
ஷாரூக் கானின் மனைவி கௌரி கான், அமீர் கான் மனைவி கிரண் ராவ், சயீஃப் அலி கான் மனைவி கரீனா கபூர்.
இவர்கள் தவிர ஃபர்தீன் கான், இம்ரன் ஹஷ்மி ஆகியோரும் இந்து மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டுள்ளதால் அவர்களையும் தனது சவால் பட்டியலில் சேர்த்துள்ளது.
இதனையடுத்து இந்த பத்திரிகையின் ஆசிரியர் முன்னா குமார் சிங் என்பவரைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, “பாலிவுட்டின் கான் நடிகர்களுக்கு எங்களது சவால் ஆகும் இது. இவர்கள் உண்மையில் தங்கள் மனைவியை நேசிப்பவர்களானால் அவர்கள் இந்து மதத்திற்கு மாற வேண்டும்.” என்றார்.
பாலிவுட்டை விடுங்கள், உலகை ஏன் மத அடையாளம் என்ற முப்பட்டைக் கண்ணாடி கொண்டுதான் பார்க்க வேண்டுமா என்று அவரிடம் கேட்டதற்கு, “இந்துக்களுக்கும் இந்து நாட்டுக்கும் எதிராக சதி நடந்து வருகிறது” என்றார்.
மேலும், ஷர்மிளா தாகூர், கரீனா கபூர், கௌரி, கிரண் ராவ், ரீனா தத், கவுரி சிப்பர் ஆகியோரை முன்னா குமார் சிங், ‘லவ் ஜிஹாதிற்கு பாதிக்கப்பட்டவர்கள்’ என்று அழைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT