Published : 08 Nov 2016 09:33 AM
Last Updated : 08 Nov 2016 09:33 AM
மத்திய தகவல் ஆணையத்தின் 11-வது மாநாடு டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் பங்கேற்ற ராஜ்நாத் சிங் பேசியதாவது:
ஓர் அரசு ஊழல் அற்றதாக மக்களுக்குப் பதில் சொல்ல கடமைப்பட்டதாக இருக்க வேண் டும். இதை கருத்திற் கொண்டே ஆர்.டி.ஐ. சட்டத்துக்கு முக்கியத் துவம் அளிக்கப்படுகிறது. இந்தச் சட்டம் அரசுக்கும் மக்களுக்கும் இடையே இணைப்பு பாலமாக உள்ளது.
ஆர்டிஐ சட்டத்தின் கீழ் சமர்ப் பிக்கப்படும் அனைத்து விண்ணப் பங்களுக்கும் சம்பந்தப்பட்ட அதி காரிகள் பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்டிஐ சட்டம் தொடர்பாக பொதுமக்கள் ஆன்லைனில் தங்கள் புகார்களை அளிக்க வகை செய்யும் ‘இ-கோர்ட்’ திட்டத் தையும் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT