Published : 23 May 2015 08:17 AM
Last Updated : 23 May 2015 08:17 AM

ஆந்திரம், தெலங்கானாவில் கத்திரி வெயிலுக்கு ஒரே நாளில் 43 பேர் பலி

ஆந்திரம், தெலங்கானா மாநிலங் களில் கத்திரி வெயில் பொது மக்களை சுட்டெரிக்கிறது. கடும் வெயிலுக்கு இம்மாநிலங்களில் 159 பேர் பலியாகியுள்ளனர். நேற்று ஒரே நாளில் 43 பேர் பலியாயினர்.

ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை அனல் காற்று வீசுகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் நடமாட முடிவதில்லை. குழந்தைகள், முதியோர்கள் இந்த வெயிலால் பெரிதும் அவதிப்படுகின்றனர்.

சில நேரங்களில் மின் வெட்டும் ஏற்படுவதால் வீடுகளிலும் தங்க முடியாத நிலை ஏற்படுகிறது. கடந்த புதன், வியாழன் ஆகிய இரண்டு நாட்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டது. இதில் 159 பேர் உயிரிழந்தனர். இந்நிலை யில் நேற்று ஒரே நாளில் மட்டும் ஆந்திராவில் 23 பேர், தெலங்கானா வில் 20 பேர் என 43 பேர் உயிரிழந் தனர். நேற்று ஹைதராபாத்தில் 45, கரீம்நகரில் 46, நல்கொண்டாவில் 47 டிகிரி வெயில் கொளுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x