Published : 31 May 2016 08:45 PM
Last Updated : 31 May 2016 08:45 PM

அரசு மருத்துவர்கள் ஓய்வு வயது 65: அரசாணை வெளியீடு

மத்திய, மாநில அரசு மருத்துவர்களின் ஓய்வு வயதை 65 ஆக அதிகரித்து மத்திய அரசு இன்று ஆணை பிறப்பித்தது.

உத்தரப் பிரதேசம் சஹரன்பூரில் கடந்த 26-ம் தேதி நடந்த விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. எனவே ஏழை நோயாளிகளின் நலன் கருதி மத்திய, மாநில அரசு மருத்துவர்களின் ஓய்வு வயது 65 ஆக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார்.

அதன்படி மத்திய, மாநில அரசு மருத்துவர்களின் ஓய்வு வயது 65 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு இன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணை மே 31-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்ட டவிட்டர் பதிவில், அனுபவம் வாய்ந்த டாக்டர்களை பணியில் நீடிக்கச் செய்திருப்பதால் ஏழைநோயாளிகள் பெரிதும் பயன் அடைவார்கள் என்று தெரிவித்துள்ளார்.







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x