Published : 23 May 2015 12:00 PM
Last Updated : 23 May 2015 12:00 PM
அசாமில் பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதில் ரயில் என்ஜின் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். மேலும், பயணிகள் சிலருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
மேற்கு வங்க மாநிலத்தின் அலிபுர்துவாரிலிருந்து அசாமின் குவாஹாட்டி இடையே சென்ற பயணிகள் விரைவு ரயில் இன்று (சனிக்கிழமை) காலை கோக்ரஜார் மாவட்டத்தில் தடம்புரண்டது. அந்த ரயிலின் 5 பெட்டிகளுடம், எஞ்சின் பெட்டியும் தடம்புரண்டன.
அதிகாலை 5.15 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. விபத்தில் ரயில் என்ஜின் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். மேலும் பயணிகள் சிலருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாக வடகிழக்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் ஜெயம்ந்தா சர்மா தெரிவித்தார்.
விபத்தை தொடர்ந்து குவாஹாட்டி மார்க்கத்தில் செல்லும் ரயில்கள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டன. தொடர்புடைய மார்க்கங்களின் ரயில் செல்லும் ரயில்கள் தாமதமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT