Published : 29 Jun 2018 08:40 PM
Last Updated : 29 Jun 2018 08:40 PM
அயர்லாந்துக்கு எதிராக இந்தியாவின் இரண்டாவது டி20 போட்டியில் இந்திய கிரிக்கெட் கேப்டன் பெரிய அணி மாற்றங்களைச் செய்துள்ளார்.
டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது.
இந்திய அணியிலிருந்து தோனி, தவண், புவனேஷ்வர் குமார், பும்ரா, ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு ராகுல், தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ், சித்தார்த் கவுல் ஆகியோர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கே.எல்.ராகுலும் விராட் கோலியும் தொடக்க வீரர்களாகக் களமிறங்கியுள்ளனர்.
ராகுல் முதல் ஓவரிலேயே சிமி சிங்கை மேலேறி வந்து தலைக்கு மேல் ஒரு பவுண்டரியும், பிறகு மிட் ஆஃப் மேல் ஒரு பவுண்டரியும் அடிக்க முதல் ஓவரிலேயே 12-ம் வாய்ப்பாடு தொடங்கியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT