Published : 12 Jan 2019 09:16 AM
Last Updated : 12 Jan 2019 09:16 AM
இப்ராஹிமின் அப்பா, அம்மா இருவருமே அரக்கோணத்திலுள்ள தனியார்ப் பள்ளி ஆசிரியர்கள். சென்னை புத்தகக்காட்சிக்குத் தன் பையனோடு அவனது நண்பர்கள் குழாமையும் உடன் அழைத்துவந்து அசத்திவிட்டார்கள். இதைக் கண்டு நாங்கள் வியந்து பாராட்டியபோது இப்ராஹிம் உற்சாகத்தோடு, “எனக்குக் கதைப் புத்தகம் படிக்கப் புடிக்கும். நான் ‘தி ஜங்கிள் புக்’ வாங்கிருக்கேன். எப்படா வீட்டுக்குப் போவோம்னு இருக்கு. முதல் வேலையா இத படிச்சு முடிக்கணும்” என்றவன், “நாங்க எல்லாரும் ப்ரெண்ட்ஸ். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு புத்தகம் வாங்கிருக்கொம். ஒருத்தர் படிச்சிட்டு இன்னொருத்தர்கிட்டப் பகிர்ந்துப்போம். அப்போ நிறைய புக் வாங்கிக்கலாம்ல. இந்த முறை முக்கியமான தலைவர்கள் பத்தின புத்த்கங்களையும் அம்மா அறிமுகப்படுத்திருக்காங்க” என்றான் ஆறாம் வகுப்பு மாணவன் இப்ராஹிம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT