Last Updated : 01 Dec, 2018 10:33 AM

 

Published : 01 Dec 2018 10:33 AM
Last Updated : 01 Dec 2018 10:33 AM

நூல் நோக்கு: நன்னெறிப்படுத்தும் எழுத்து

ஆரோக்கியமான சமநிலைப் பார்வையுடன் உலகத்தைப் பார்த்தால் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதருமே சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லாதவர்கள்தான் என்பதை அறிவுறுத்தும் சின்னச் சின்னக் கட்டுரைகளின் தொகுப்பு இது.

கதையாடல் முறையில் இறையன்பு எழுதியுள்ள இந்தக் கட்டுரைகள் ஒவ்வொன்றிலும் தான் படித்த, ரசித்த, அனுபவித்த சுவைமிகு தருணங்களை எழுதியிருக்கிறார். ஸ்வெட்டரெல்லாம் அணிந்துகொண்டு கடும் குளிரில் கிர் காட்டைச் சுற்றிப்பார்க்கப் போனபோது அங்கே சாதாரண உடையில் இருந்த ஒருவரைச் சந்திக்க நேரும் இறையன்பு, ‘குளிர் மனதில்தான் இருக்கிறது என எண்ணிக்கொண்டேன்’ என்கிறார். ‘பெற்றோருக்கு நாய்களைப் பிடித்தால் குழந்தைகளுக்கும் நாய்களைப் பிடிக்கும்’ என்கிறார். சுவாரஸ்யங்களின் வழியே வாசகர்களைத் தன் வழக்கமான பாணியில் வழிநடத்தவும் செய்கிறார்.

- மானா பாஸ்கரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x