Last Updated : 08 Dec, 2018 09:56 AM

 

Published : 08 Dec 2018 09:56 AM
Last Updated : 08 Dec 2018 09:56 AM

பிறமொழி நூலகம்: வடகிழக்கின் வாழ்க்கைச் சித்திரம்

அசாமியில் குலா சைக்கியாவின் எழுத்துகள் புதிய பாணியை அறிமுகப்படுத்தின. அவரது சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறுகதைத் தொகுப்பு இப்போது ஆங்கிலத்தில் வெளிவந்துள்ளது.

குலா சைக்கியாவின் இந்தக் கதைகளை ரூபாஞ்சலி பரூவா, பர்பினா ரஷீத், ரினுஸ்மிதா ககோடி லகார், ஸ்துதி கோஸ்வாமி, மீனாட்சி பர்கோடொகி, நீத்தா ஷர்மா ஆகியோர் அவ்வப்போது பல்வேறு இதழ்களுக்காக மொழிபெயர்த்திருந்தனர். அவை இப்போது ஒரு தொகுப்பாக வெளியாகியுள்ளது. நகர வாழ்க்கையின் சிக்கல்களைச் சொல்வது பிரதான நோக்கமாக இருந்தபோதிலும் அக உலகை விவரிப்பதாகவும் இக்கதைகள் அமைகின்றன. சூழ்ந்திருக்கும் குழப்பங்கள், வன்முறை, பேரழிவுகள் ஆகியவற்றை ஊடுபாவாகக் கொண்டுசெல்லும் இந்த எழுத்து, ஒரு மாநிலத்தின் காவல் துறைத் தலைவரின் பேனாவிலிருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x