Published : 13 Oct 2018 08:51 AM
Last Updated : 13 Oct 2018 08:51 AM

ஊர் கூடி நூலிழுத்த விழா

‘நம்ம ஊர் பெருமை பேசும் விழா!’ என ஊரில் உள்ளவர்களை அழைத்து நூல் வெளியீட்டு விழா நடத்தியிருக்கிறார் வெ.கோ.பாலதண்டபாணி. ‘காலந்தோறும் வெள்ளலூர்’ நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கை முன்னூறுக்கும் மேல். சிந்துசமவெளி நாகரிகத்துக்குப் பிறகு அகழ்வாராய்ச்சியில் கிமு கால நாகரிகத் தொட்டிலைச் சுட்டிக்காட்டிய ஊர்கள் வெகு சிலவே. அதில், நொய்யல் ஆற்றங்கரை நாகரிகமாக கிமு 2-ம், 3-ம் நூற்றாண்டுகளில் பெயர்பெற்றிருந்த ஊர் கோவை வெள்ளலூர். வேளில், வேளிலூர், வெளிலுார், வெள்ளலூர், தென்னூர், தேனூர், வள்ளலூர் என்றெல்லாம் வழங்கப்பட்ட இந்த ஊருக்கு ரோமானிய நாட்டுடன் வணிகத்தொடர்பு இருந்ததற்கும், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் வாழ்ந்ததற்கும் ஆதாரமாக ரோமானிய நாணயங்கள், செப்பேடுகள், முதுமக்கள் தாழிகள் என ஏராளமாய்க் கிடைத்திருக்கின்றன. அப்படிப்பட்ட இந்த ஊருக்கெனத் தனிப்பட்ட வரலாறு சொல்லும் புத்தகங்கள் இல்லை. அதைத்தான் மூன்றரை வருட கள ஆய்வில் உருவாக்கியிருக்கிறார் தண்டபாணி.

-கா.சு.வேலாயுதன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x