Published : 24 Jul 2018 10:54 AM
Last Updated : 24 Jul 2018 10:54 AM

வேலை வேண்டுமா? - நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவன பணி

மத்திய அரசின் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் நேரடி நியமன முறையில் 685 உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்குப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

வயது 21 முதல் 30-க்குள் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வானது முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வை உள்ளடக்கியது. இரண்டு தேர்வுகளுமே ஆன்லைன் வழியில் நடத்தப்படும்.

முதல்நிலைத் தேர்வில் பொது ஆங்கிலம், ரீசனிங், கணிதத் திறன் ஆகிய 3 பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். ஒரு மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும். மொத்த மதிப்பெண் 100. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் 2-வது கட்டத் தேர்வான மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

மெயின் தேர்வில் ரீசனிங், பொது ஆங்கிலம், பொது அறிவு, கணினி அறிவு, கணிதம் ஆகிய 5 பகுதிகளில் தலா 40 கேள்விகள் வீதம் மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். மொத்த மதிப்பெண் 250, பதிலளிக்க 2 மணி நேரம் தரப்படும்.

மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் எந்த மாநிலத்தில் பணியாற்ற விருப்பம் தெரிவித்திருந்தார்களோ அந்தப் பிராந்திய மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே மெயின் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவர்.

உதவியாளர் பணிக்கு ஆரம்ப நிலையில் சம்பளம் ரூ.25 ஆயிரம் அளவுக்குக் கிடைக்கும். பணியில் சேர்ந்த பிறகு படிப்படியாகப் பதவி உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். தகுதியுடைய பட்டதாரிகள் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தின் இணையதளத்தைப் (www.newindia.co.in) பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31 ஜூலை 2018

முதல்நிலைத் தேர்வு: 8 அல்லது 9 செப்டம்பர் 2018

செப்டம்பர் மெயின் தேர்வு: 6 அக்டோபர் 2018

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x