Last Updated : 10 Apr, 2019 11:30 AM

 

Published : 10 Apr 2019 11:30 AM
Last Updated : 10 Apr 2019 11:30 AM

ரஜினியின் தர்பார் படப்பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

ரஜினி நடிப்பில் உருவாகும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு, படப்பூஜையுடன் மும்பையில் தொடங்கப்பட்டுள்ளது.

'பேட்ட' படத்துக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் ரஜினி. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு 'தர்பார்' என்று தலைப்பிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது.

தற்போது, 'தர்பார்' படப்பிடிப்பு படப்பூஜையுடன் மும்பையில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ்கரன் கலந்து கொண்டார். காவல்துறை அதிகாரியாக ரஜினி நடிக்கும் இப்படத்தில் நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் படப்பூஜை புகைப்படங்களை வைத்துப் பார்க்கும் போது, முதலாவதாக சண்டைக்காட்சிகளை படமாக்கவுள்ளனர் எனத் தெரிகிறது. ஏனென்றால், சண்டை இயக்குநர் ராம் - லட்சுமண் படப்பூஜையில் கலந்து கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x