Last Updated : 10 Apr, 2019 10:56 AM

 

Published : 10 Apr 2019 10:56 AM
Last Updated : 10 Apr 2019 10:56 AM

அஜித் நடிப்பு பிரமாதம்; விரைவில் இந்திப் படங்கள் பண்ணுவார்: போனி கபூர் நம்பிக்கை

அஜித் நடிப்பு பிரமாதம், விரைவில் இந்திப் படங்கள் பண்ண சம்மதம் தெரிவிப்பார் என்று தயாரிப்பாளர் போனி கபூர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள படம் 'நேர்கொண்ட பார்வை'. இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'பிங்க்' படத்தின் ரீமேக்காகும் இது.

இப்படத்தின் எடிட்டிங்கில் சில காட்சிகளைப் பார்த்துவிட்டு, இதன் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

’நேர்கொண்ட பார்வை’ சில காட்சிகளை பார்த்தேன். மகிழ்ச்சி. அஜித்தின் நடிப்பு பிரமாதம். அவர் விரைவில் இந்திப் படங்கள் செய்ய ஒப்புக் கொள்வார் என்று கருதுகிறேன். அவருக்காக 3 ஆக்‌ஷன் கதைகள் தயாராக உள்ளன, அதில் ஒன்றிற்கு அவர் சம்மதம் தெரிவிப்பார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

இவ்வாறு போனி கபூர் தெரிவித்துள்ளார்.

'நேர்கொண்ட பார்வை' தயாரிப்பாளர் போனி கபூரின் இந்த ட்வீட் தகவல், அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

வித்யாபாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்துள்ளர் இப்படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆகஸ்ட் 10-ம் தேதி இப்படம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x