Published : 06 Apr 2019 08:11 AM
Last Updated : 06 Apr 2019 08:11 AM

‘கண்ணாடி’யில் நரேன், மாளவிகா

கார்த்திக் ராஜூ இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் ‘கண்ணாடி’ படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து, தற்போது இசை சேர்ப்பு பணிகள் மற்றும் இறுதிக்கட்ட வேலைகள் நடந்து வருகின்றன. இப்படத்தில் ‘துருவங்கள் 16’, ‘நரகாசுரன்’ ஆகிய படங்களின் இயக்குநர் கார்த்திக் நரேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அத்துடன் ‘குக்கூ’ நாயகி மாளவிகா நாயரும் ஒரு கதாபாத்திரம் ஏற்கவுள்ளார்.  இந்தப் படம் பற்றி, இதன் இயக்குநர் கார்த்திக் ராஜூ கூறியதாவது: இந்தப் படத்தில் நரேன் நடித்துள்ள கதாபாத்திரத்தில் இளமை ததும்பும் நபர் ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என யோசித்தோம். சந்தீப்பும், கார்த்திக் நரேன் இருவரும் ‘நரகாசுரன்’ படத்தில் இருந்து நல்ல நண்பர்கள்.  அந்த நட்பு இந்தப் பேச்சுவார்த்தைக்கு பாலமாக இருந்தது. நரேனை சந்தித்து அவரது கதாபாத்திரத்தின் தன்மையை சொன்னேன். படம் முழுக்க அவ்வபோது வந்து செல்லும் அழுத்தமான ஒரு ரோல். கேட்டதும் ஓ.கே என்றார். அப்படித்தான் அவர் இந்தப் படத்துக்குள் வந்தார். அதேபோல ‘குக்கூ’ படத்தின் வழியே கவனம் ஈர்த்த மாளவிகா நாயரும் இப்படத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறார். படத்தின் இந்த கதாபாத்திர அமைப்பு கவனத்தை ஈர்க்கும்!’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x