Published : 06 Feb 2019 09:07 AM
Last Updated : 06 Feb 2019 09:07 AM
இயக்குநர் மு.மாறன் சஸ்பென்ஸ் திரில்லர் வகையில் இயக்கிய ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் அதே த்ரில்லர் பின்னணியில் கிரைம் விஷயங்களைச் சேர்த்து ‘கண்ணை நம்பாதே’ என்ற படத்தை உருவாக்கவுள்ளார். அடுத்த வாரம் முதல், படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படத்தில், உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக ஆத்மிகா நடிக்கிறார்.
இயக்குநரின் முந்தைய படம் போலவே இப்படத்துக்கும் கண்ணுடன் சம்பந்தப்பட்டதாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ‘‘ஆக்ஷன், திரில்லர் களத்தில் திரைக்கதை அமையும் போது கதையை எந்த ஒரு இடத்திலும் சொல்ல முடிவதில்லை. இக்களமும் அப்படித்தான்!’’ என்கிறார் இயக்குநர் மு.மாறன். படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்ய, ஷான் லோகேஷ் எடிட்டிங் செய்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT