Published : 02 Feb 2019 08:15 PM
Last Updated : 02 Feb 2019 08:15 PM

விளம்பரத்துக்காக பண்ணினேனா? - புகைப்படங்கள் வெளியானது குறித்து ஹன்சிகா வேதனை

விளம்பரத்துக்காக தான் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் என்ற கருத்துக்கு ஹன்சிகா வேதனையுடன் பதிலளித்துள்ளார்.

தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ஹன்சிகா. அதர்வாவுக்கு நாயகியாக '100' படத்தில் நடித்து முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகும் 'மஹா' படத்தில் நடித்து வருகிறார். புதுமுக இயக்குநர் ஜமீல் இயக்கி வருகிறார்.

சில நாட்களுக்கு முன்பாக ஹன்சிகாவின் அந்தரங்கப் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது. தனது தொலைபேசி மற்றும் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது என்று ஹன்சிகா தெரிவித்திருந்தார். சமீபத்தில் அவருக்கு நிறைய படங்கள் இல்லை என்பதால் விளம்பரத்துக்காகவே ஹன்சிகா வெளியிட்டார் என்று செய்திகள் வெளியானது.

இச்செய்தி தொடர்பாக ஹன்சிகா கூறியிருப்பதாவது:

''சில மாதங்களுக்கு முன்பாக அமெரிக்காவுக்குச் சென்றிருந்தேன். அப்போது தான் எனது தொலைபேசியில் பிரச்சினை ஏற்பட்டது. அதன் பின்பு தான் என் புகைப்படங்களும் வெளியானது. அது எனக்கு பெரும் அதிர்ச்சி தான். அப்புகைப்படங்கள் அனைத்துமே 4 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்தவை.

யாரோ என் தொலைபேசியை ஹேக் செய்து வெளியிட்டுள்ளனர். விளம்பரத்துக்காக படங்களை வெளியிட்டேன் என்று சிலர் கூறுவது வேதனை அளிக்கிறது. அதே வேளையில் பலரது கருத்துகள் என்னைக் காயப்படுத்தியுள்ளது. என் தொலைபேசி மற்றும் ட்விட்டரை ஹேக் செய்தவர்களைக் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது''.

இவ்வாறு ஹன்சிகா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x