Published : 20 Jan 2019 09:02 AM
Last Updated : 20 Jan 2019 09:02 AM

மீண்டும் லண்டனில் ‘ஏபிசிடி - 3’

தமிழில் ‘சார்லி சாப்லின் 2’, ‘யங் மங் சங்’, ‘ஊமை விழிகள்’, ‘பொன் மாணிக்கவேல்’ ஆகிய படங்களை விறுவிறுவென முடித்துவிட்டு, ‘ஏபிசிடி - 3’ இந்தி படத்துக்காக பிப்ரவரி முதல் வாரம் லண்டன் புறப்பட உள்ளார் பிரபுதேவா. கத்ரினா கைஃப் உள்ளிட்டோரும் உடன் செல்கின்றனர்.

இதற்கிடையே, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் அடுத்த படத்திலும் பிரபுதேவா நடிக்க உள்ளார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்குகிறது. இந்த 2 பட வேலைகளையும் முடித்துக்கொண்டு சிறு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்குநர் பணியை கையில் எடுக்கிறார் பிரபுதேவா. சல்மான் கானின் ‘தபாங் 3’ படத்துக்கான பணிகளை மார்ச் இறுதியில்  தொடங்க உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x