Published : 08 Dec 2018 09:09 AM
Last Updated : 08 Dec 2018 09:09 AM

‘அக்கரைச்சீமை’ அனுபவம்

இசையமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழாவை பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார். சிங்கப்பூர் சுற்றுலா வாரியத்திடம் அந்த அனுபவங்களை அவர் சுவாரஸ்யத்தோடு பகிர்ந்துகொண்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

‘‘சிங்கப்பூர் என் இரண்டாவது வீடு மாதிரி.  சமீபத்தில் இங்கு நடந்த எனது பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில், எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்றான ‘அக்கரைச்சீமை அழகினிலே’ பாடலை, சிங்கப்பூரின் எழில் கொஞ்சும் அழகிய இடங்களைப் பின்னணியாக கொண்டு மீண்டும் இசையமைத்தேன். சிங்கப்பூர் அழகான இடம். இங்குள்ள மக்கள் அன்பானவர்கள். ஒரு சுவாரஸ்ய ஒற்றுமை என்னவென்றால், இப்பாடலின் ஒரிஜினல் கம்போசிஷன் 40 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூரில்தான் ஷூட் செய்யப்பட்டது. அதை மீண்டும் ஒரு நிகழ்ச்சி வழியே மீட்டெடுத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி’’ என்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x