Published : 13 Oct 2018 04:39 PM
Last Updated : 13 Oct 2018 04:39 PM

இயக்குநர் மகேந்திரனுடன் அதிகம் அன்பு பாராட்டும் ரஜினி

இயக்குநர் மகேந்திரனோடு மீண்டும் பணிபுரிந்து வருவதால், மிகவும் சந்தோஷத்துடன் அவருடனே அதிக நேரம் ரஜினி செலவழித்து வருகிறார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு வாராணசியைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதில் ரஜினி, த்ரிஷா, சசிகுமார், இயக்குநர் மகேந்திரன் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறது படக்குழு.

இப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே ரஜினி - மகேந்திரன் இருவருமே நீண்ட நேரம் தங்களுடைய பழைய கதைகளைப் பேசியபடி இருந்திருக்கிறார்கள். அதுவும் முதலில் ரஜினியை சந்தித்துப் பேசும்போது, புகைப்படத்துக்காக தோளில் கைபோடவே மிகவும் பயந்திருக்கிறார் இயக்குநர் மகேந்திரன்.

அப்போது, இயக்குநர் மகேந்திரனின் கைகளை எடுத்து தன் தோளின் மீது போட்டு புகைப்படம் எடுத்திருக்கிறார் ரஜினி. எப்போதுமே இயக்குநர் மகேந்திரன் என்றால் ரஜினிக்கு அவ்வளவு பிடிக்கும். ’முள்ளும் மலரும்’, ‘ஜானி’, ‘கை கொடுக்கும் கை’ ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணிபுரிந்திருக்கிறார்கள்.

ஒரு முறை இயக்குநர் பாலசந்தர் 'பிடித்த இயக்குநர் யார்’ என்று ரஜினியிடம் கேட்ட போது, கொஞ்சம் கூட தாமதிக்காமல் ரஜினி சொன்ன பெயர் ‘இயக்குநர் மகேந்திரன்’. அப்போது 'என்ன சொல்லல பாத்தியா நீ' என்று கிண்டலாக குறிப்பிட்டார் இயக்குநர் பாலசந்தர். அந்தளவுக்கு இயக்குநர் மகேந்திரன் மீது பற்று கொண்டவர் ரஜினி.

இப்போது மீண்டும் மகேந்திரனோடு பணிபுரிந்து வருவதால், மிகவும் சந்தோஷத்துடன் அவருடனே அதிக நேரம் ரஜினி செலவழித்து வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x