Published : 11 Sep 2018 12:14 PM
Last Updated : 11 Sep 2018 12:14 PM
ஏ.ஆர்.முருகதாஸைப் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சர்கார்’. விஜய் ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ.கருப்பையா, யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார். காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ம் தேதி இந்தப் படத்தின் பாடல்கள் ரிலீஸாக உள்ளன. வருகிற தீபாவளிக்குப் படம் ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2-ம் தேதியுடன் ‘சர்கார்’ படப்பிடிப்பு நிறைவடைந்தது. கடைசி நாள் படப்பிடிப்பில் வரலட்சுமி பங்கேற்றார். பின்னர், டப்பிங் பேசத் தொடங்கிய வரலட்சுமி, தற்போது அதையும் முடித்துக் கொடுத்துவிட்டார். இதை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் வரலட்சுமி.
“சர்கார் டப்பிங் முடிந்தது. உங்களுடன் பணியாற்றியதில் மிகுந்த மகிழ்ச்சி. நான் இதுவரை பணியாற்றியதிலேயே மிகவும் அழகான, இனிமையான இயக்குநர் நீங்கள். எப்போதுமே அமைதியாக இருக்கும் குணம் கொண்டவர். இந்தப் பயணத்தில் நானும் ஒரு பங்காக இருந்ததில் மகிழ்ச்சி” என ஏ.ஆர்.முருகதாஸுடன் இருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார் வரலட்சுமி சரத்குமார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT