Published : 24 Aug 2018 06:23 PM
Last Updated : 24 Aug 2018 06:23 PM
அக்டோபர் 2-ம் தேதி ‘சர்கார்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ராதாரவி, வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைக்க, அனைத்துப் பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார். சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட பல இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. சமீபத்தில் கூட விஜய்யின் ஓப்பனிங் பாடலை லாஸ் வேகாஸில் படமாக்கினர்.
இந்நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது சன் பிக்சர்ஸ். காந்தி ஜெயந்தி தினமான அக்டோபர் 2-ம் தேதி இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. சினிமா பிரபலங்கள் பலர் இதில் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
வருகிற தீபாவளி விடுமுறைக்கு ‘சர்கார்’ ரிலீஸாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT