Published : 24 Jul 2018 11:34 AM
Last Updated : 24 Jul 2018 11:34 AM
ரம்யா வெளியேற்றப்பட்டதைப் பற்றி ஜனனி, மஹத், வைஷ்ணவி ஆகியோர் பேசிக் கொண்டிருந்தனர்.
”ரம்யா வெளியேறியதை இன்னும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை” என்று புலம்பிக் கொண்டிருந்தனர்.
வீட்டில் உள்ளவர்கள் அனைவரையும் அழைத்த பிக் பாஸ் அவர்களுக்கு டிவியில் சில வீடியோக்களை ஒளிபரப்பினார். அதில் யார் யார் அடிக்கடி விதிமீறலில் ஈடுபட்டவர்கள் என்பது காட்டப்பட்டது.
மும்தாஜும் மஹத்தும் அடிக்கடி தூங்கியதும், யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் அடிக்கடி வேறு மொழிகளில் பேசியதும் வீடியோவில் காட்டப்பட்டது. அதில் ஒரு காட்சியில் இருவரும் பொன்னம்பலத்தை இந்தியில் திட்டிக் கொண்டிருந்தனர். அதை வைஷ்ணவி மொழிபெயர்த்து பாலாஜி, ரித்விகா, ஜனனி ஆகியோரிடம் பற்றவைத்தார்.
பின்னர் பேசிய பிக் பாஸ் விதிமீறலில் ஈடுபட்டவர்களை கடுமையாக எச்சரித்தார். அதிக விதிமீறலில் ஈடுபட்ட மஹத் சிறையில் அடைக்கப்பட்டார். அது மட்டுமல்லாமல் நேரடியாக இந்த வார எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டார்.
இந்த முறை யார் யாரை நாமினேட் செய்ய வேண்டும் என்று பாலாஜி கேங் முடிவு செய்து வைத்திருந்தனர் (இது விதிமீறல் இல்லையா பிக் பாஸ்?)
வீடியோவில் பொன்னம்பலத்தை யாஷிகாவும் ஐஸ்வர்யாவும் திட்டியதை வைஷ்ணவி அனைவரிடமும் சொல்ல பிரச்சினை வெடித்தது.
தான் அப்படிச் சொல்லவே இல்லை. அவரைப் பற்றி பேசவே இல்லை என்று ஐஸ்வர்யா அடித்துக் கூறினார்.
இவ்வளவு நாள் ரகசியமாக நடந்த நாமினேஷன் படலம் இந்த முறை அனைவருக்கும் தெரியும்படி நடந்தது.
ஒருவர் யாரை நாமினேட் செய்ய விரும்புகிறாரோ அவர்கள் இருவரையும் வெளியே அழைத்து வந்து அவர்கள் முகத்தில் இரு புள்ளிகள் வைத்து அதற்கான காரணத்தையும் சொல்ல வேண்டும்.
அதன்படி டேனியல், மும்தாஜ் இருவரையும் அழைத்து வைஷ்ணவி நாமினேட் செய்தார்.
ஐஸ்வர்யா பிரச்சினையை நேற்று கிளப்பியதாலோ என்னவோ வைஷ்ணவியே அதிகமானவர்களால் நாமினேட் செய்யப்பட்டார்.
டேனியல் பொன்னம்பலத்தையும், வைஷ்ணவியையும் நாமினேட் செய்தார். பொன்னம்பலத்துக்கு அவர் கூறிய காரணம் “வாரம் முழுவதும் வேறு மாதிரி இருக்கிறார். தரங்கெட்ட பேச்சுகளைப் பேசுகிறார். வார இறுதியில் வேறு மாதிரி இருக்கிறார். ஒருவேளை கமல் சார் வருகிறார் எனபதற்காகவா என்று தெரியவில்லை” என்று கூறினார்.
இறுதியாக நாமினேட் ஆனவர்கள் பொன்னம்பலம், மும்தாஜ், ஐஸ்வர்யா, யாஷிகா, மஹத், வைஷ்ணவி. இதில் நிமிர்ந்து நில் டாஸ்க்கில் ஐஸ்வர்யா வெற்றி பெற்றதால் அவருக்கு ஒரு சூப்பர் பவர் கொடுக்கப்பட்டது. அதை இப்போது உபயோகித்து அவர் யாராவது ஒருவரைக் காப்பாற்றலாம் என்று பிக் பாஸ் அறிவித்தார். ஐஸ்வர்யா தன்னைக் காப்பாற்றிக் கொள்வதாகக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT