Published : 20 Jul 2018 04:59 PM
Last Updated : 20 Jul 2018 04:59 PM
‘கட்டாயப்படுத்தி தான் சிம்பு எனக்கு ஊட்டிவிட்டார்’ என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. மல்ட்டி ஸ்டாரர் படமான இதில் அரவிந்த் சாமி, சிம்பு, ஜோதிகா, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றன. படத்தின் ஷூட்டிங் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஷூட்டிங்கின்போது விஜய் சேதுபதிக்கு சிம்பு சாப்பாடு ஊட்டி விடுவது போன்ற புகைப்படம் வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலானது.
இதுகுறித்து விஜய் சேதுபதியிடம் கேட்டபோது, “நான் ‘வேணாம் தலைவா’ என்றுதான் சொன்னேன். ‘அதெப்படி வேண்டாம்னு சொல்வீங்க?’ என்று கட்டாயப்படுத்தி தான் எனக்கு ஊட்டிவிட்டார். ‘போட்டோ எடுத்துப் போடவேண்டாம்’ என்றும் சொன்னேன். ‘நான் எடுத்துப் போடுவேன்’ என்று சொல்லி இரண்டு வாய் ஊட்டிவிட்டார். ஷூட்டிங் ஸ்பாட் ஜாலியாக இருக்கும்” என்றார்.
'காஷ்மோரா' படத்தில் நடிக்க விரும்பினேன்: விஜய் சேதுபதி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT