Published : 17 Jul 2018 12:05 PM
Last Updated : 17 Jul 2018 12:05 PM
ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் உருவாகி வரும் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூலை 19-ம் தேதி வெளியாகவுள்ளது.
இயக்குநர் மிஷ்கின், இயக்குநர் சுசீந்திரன் மற்றும் விக்ராந்த் மூவரும் இணைந்து நடித்து வரும் படம் ‘சுட்டுப்பிடிக்க உத்தரவு’. இப்படத்தை ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கவுள்ளார். கல்பதரு பிக்சர்ஸ் ராம்மோகன் இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.
சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில், இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து, இறுதிகட்டப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது படக்குழு. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 19-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
'சுட்டுப்பிடிக்க உத்தரவு' படத்தின் கதைக்களம் குறித்து இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா கூறியிருப்பதாவது:
விக்ராந்த் மற்றும் சுசீந்திரன் ஆகிய இருவரும் ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் வேலை செய்பவர்கள். ஒரு நாள் அவர்கள் பணியில் இருக்கும் பொழுதே ஒரு திகிலான 'க்ரைம்' நடக்கின்றது. இதனை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக மிஷ்கின் நடிக்கின்றார். இதற்குப் பிறகு என்ன ஆனது என்பதே இந்தக் கதை. பார்வையாளர்களை சீட்டின் நுனியில் உட்கார்ந்து விறுவிறுப்போடு பார்க்கவைக்கும் கதை இது.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT