Published : 10 Jul 2018 02:57 PM
Last Updated : 10 Jul 2018 02:57 PM
‘சர்கார்’ படப்பிடிப்புத் தளத்தில் இருந்து விஜய் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார் வரலட்சுமி சரத்குமார்.
விஜய் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிவரும் இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, க்ரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். சன் பிக்சர்ஸ் சார்பில் கலாநிதி மாறன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
அரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில், ராதாரவி மற்றும் பழ.கருப்பையா இருவரும் அரசியல்வாதிகளாக நடிக்கின்றனர். மேலும், வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு, பிரேம் குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
சென்னை, கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, கொல்கத்தா உள்ளிட்ட பல இடங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் என்பதால், வேகவேகமாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இந்நிலையில், படப்பிடிப்புத் தளத்தில் இருந்து விஜய்யைப் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் வரலட்சுமி. “இறுதியாக நம் தளபதி விஜய்யைக் காட்டுவதற்கு அனுமதி கிடைத்து விட்டது. அனுமதி கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ் சாருக்கு நன்றி” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் வரலட்சுமி.
Finallllyyyyyy got permission to show our thalapathy @actorvijay thankkkk you @ARMurugadoss sir for allowing me.. heheheheh #sarkar pic.twitter.com/lTwMmoCsjg
— varu sarathkumar (@varusarath) July 10, 2018
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT