Published : 09 Jul 2018 04:18 PM
Last Updated : 09 Jul 2018 04:18 PM

‘அறம்’ கோபி நயினார் இயக்கத்தில் ஆர்யா

‘அறம்’ கோபி நயினார் இயக்கவுள்ள புதிய படத்தில், ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார்.

நயன்தாரா நடித்த ‘அறம்’ படத்தை இயக்கியவர் கோபி நயினார். கடந்த வருடம் நவம்பர் மாதம் வெளியான இந்தப் படத்தில், கலெக்டராக நடித்தார் நயன்தாரா. ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்த குழந்தையை மீட்கப் போராடுவதுதான் இந்தப் படத்தின் கதை.

சமூகக் கருத்துகள் நிறைந்த இந்தப் படத்தை, மக்கள் பயங்கரமாகக் கொண்டாடினர். பெரும்பாலான மக்களுக்கு இந்தப் படம் ரொம்பவே பிடித்துப் போனது. நயன்தாராவின் சினிமா வாழ்க்கையில், முக்கிய மைல்கல்லாக இந்தப் படம் அமைந்தது.

எனவே, இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகப் போகிறது என்று தகவல் பரவியது. இதுகுறித்து ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில், ‘இப்போதைக்கு ‘அறம் 2’ கிடையாது என்றும், ‘அறம்’ போலவே சமூகக் கருத்துகள் நிறைந்த படத்தை இயக்கப் போவதாகவும் கோபி நயினார் தெரிவித்தார்.

அடுத்து இயக்கப்போவது 'அறம்' பார்ட் 2 இல்லை: இயக்குநர் கோபி நயினார்

ஆனாலும், ‘அறம் 2’ படத்தில் நயன்தாரா நடிக்கப் போகிறார், முதல் பாகத்தைத் தயாரித்த கோட்டபாடி ராஜேஷே இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறார் என்று தற்போதுவரை தகவல்கள் பரவிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்துக்கான வேலைகளைத் தொடங்கிவிட்டார் கோபி நயினார். அவருடைய படத்தில் ஹீரோவாக நடிப்பது, ஆர்யா. வடசென்னையை மையமாகக் கொண்டுள்ள இந்தக் கதையில், குத்துச்சண்டை வீரராக நடிக்கிறார் ஆர்யா. இந்தப் படத்தை ரவீந்திரன் தயாரிக்கிறார்.

இதுகுறித்து கோபி நயினாரிடம் கேட்டபோது, மேற்கண்ட தகவல்கள் உண்மை என்று தெரிவித்தார். ஹீரோயின், தொழில்நுட்பக்குழு போன்றவர்களைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x