Published : 30 Jun 2018 10:12 AM
Last Updated : 30 Jun 2018 10:12 AM

இந்திரா - ரஞ்சித் காதல் படலம்

பாசத்தையும், பயணத்தையும் மையமாகக் கொண்டு ராஜ் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ‘கடல் கடந்து உத்யோகம்’ தொடரில், நாயகன், நாயகி காதல் கதையின் அத்தியாயங்கள் இனி வரும் வாரங்களில் தொடங்க உள்ளன.

தொழிலதிபர் நாராயணனின் மகன் வழிப் பேரன் ரஞ்சித், அமெரிக்காவில் குடியுரிமை பெற்று வசிக்கிறார்.

அவர் சொந்த ஊருக்கு வந்த நேரத்தில், தனது மகள் வழிப் பேத்தி இந்திராவை அவருக்கு மணமுடிக்க நினைக்கிறார் நாராயணன். ரஞ்சித்தின் அம்மா பிரியா இதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிறார். டாக்டராக பணியாற்றும் இந்திரா மெல்ல, ரஞ்சித்தை காதல் வலையில் விழ வைக்கும் முயற்சியில் இறங்குகிறார். இந்தக் காதல் காட்சிகள் அடுத்தடுத்த வாரங்களில் இடம்பெறுகின்றன. ரஞ்சித் அமெரிக்கா திரும்புகிறாரா? இது சம்பந்தமாக என்ன முடிவெடுத்தார் என்பது அடுத்தடுத்து தெரியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x