Published : 30 Jun 2018 10:11 AM
Last Updated : 30 Jun 2018 10:11 AM

சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘சூப்பர் சிங்கர்’ சீசன் 6-க்கான இறுதிப்போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜூலை 15-ம் தேதி நடக்க உள்ளது. அதற்கு முன்பு ஜூலை 8-ம் தேதி சூப்பர் சிங்கர் அரங்கில் நடக்கும் ‘ப்ரீ ஃபினாலே’ நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, போட்டியாளர்களை உற்சாகப்படுத்த உள்ளார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, இறுதிப் போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் வாக்களிக்கும் முறை தொடங்கப்பட உள்ளது. தேர்வாகி உள்ள 5 போட்டியாளர்களையும் சூப்பர் சிங்கர் நடுவர்கள் உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், ஸ்வேதா மோகன் ஆகியோர் உற்சாகப்படுத்தும் எபிஸோட்கள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x