Published : 30 Jun 2018 10:11 AM
Last Updated : 30 Jun 2018 10:11 AM
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘சூப்பர் சிங்கர்’ சீசன் 6-க்கான இறுதிப்போட்டி சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் ஜூலை 15-ம் தேதி நடக்க உள்ளது. அதற்கு முன்பு ஜூலை 8-ம் தேதி சூப்பர் சிங்கர் அரங்கில் நடக்கும் ‘ப்ரீ ஃபினாலே’ நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, போட்டியாளர்களை உற்சாகப்படுத்த உள்ளார். இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, இறுதிப் போட்டியாளர்களுக்கு ரசிகர்கள் வாக்களிக்கும் முறை தொடங்கப்பட உள்ளது. தேர்வாகி உள்ள 5 போட்டியாளர்களையும் சூப்பர் சிங்கர் நடுவர்கள் உன்னிகிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், ஸ்வேதா மோகன் ஆகியோர் உற்சாகப்படுத்தும் எபிஸோட்கள் தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT