Published : 10 Jun 2018 08:37 AM
Last Updated : 10 Jun 2018 08:37 AM

‘காலா’ படத்தில் நடித்த நாயை ரூ.2 கோடிக்கு வாங்க போட்டி: குழந்தை போல் வளர்த்ததால் விற்க மறுக்கும் உரிமையாளர்

‘காலா’ படத்தில் ரஜினியுடன் நடித்த நாயை விலைக்கு வாங்க கடும் போட்டி உருவாகியுள்ளது. ரூ.2 கோடி வரை விலை கொடுக்க தயாராக இருந்தும், குழந்தை போல் வளர்த்ததால் நாயை விற்க மறுக்கிறார் அதன் உரிமையாளர் சைமன்.

ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ திரைப்படம் கடந்த 7-ம் தேதி வெளியானது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானபோதே போஸ்டரில் ரஜினியுடன் நின்று கொண்டிருந்த நாய் பலரது கவனத்தையும் ஈர்த்தது. அப்போது முதலே அந்த நாயை வாங்க பலரும் போட்டி போட்டனர். ஆனால் அந்த நாயை விற்க அதன் உரிமையாளர் சைமன் மறுத்து வந்தார்.

இந்நிலையில் காலா திரைப்படம் வெளியான நிலையில் அந்த நாயை ரூ.2 கோடி வரை விலை கொடுத்து வாங்க கடும் போட்டி உருவாகியுள்ளது.

இதுகுறித்து நாயின் உரிமையாளரும், பயிற்சியாளருமான சைமன் ‘தி இந்து’விடம் கூறியதாவது :

இன்றைக்குக்கூட வெளிநாடுகளில் இருந்து இரண்டு, மூன்று பேர் போனில் பேசினர். ஒரு சிறுமி ‘நாயை கொடுங்க அங்கிள்’ என்று அழுதுகொண்டே கேட்டது. எனக்கே மனதுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. நிறைய விலங்குகளுக்கு பயிற்சி அளித்து வருகிறேன். சினிமாவில் நடிக்க வைக்கிறேன். அது என்னமோ மணியின் (நாயின் பெயர்) மீது எனக்கு தனிப் பாசம் ஏற்பட்டுவிட்டது. அதை என் குழந்தை போன்று வளர்த்திருக்கிறேன். அதனால் அதை விற்க மனம் வரவில்லை. யார் கேட்டாலும் கொடுக்க மாட்டேன்

இவ்வாறு சைமன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x