Published : 02 Jun 2018 12:18 PM
Last Updated : 02 Jun 2018 12:18 PM
‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் சிம்புவின் போர்ஷன் நிறைவு பெற்றுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘செக்கச் சிவந்த வானம்’. அரவிந்த் சாமி, ஜோதிகா, சிம்பு, விஜய் சேதுபதி, அதிதி ராவ், அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்கிறார்.
ஆக்ஷன் த்ரில்லராக ‘செக்கச் சிவந்த வானம்’ உருவாகி வருகிறது. கடந்த ஜனவரி மாதம் இந்தப் படத்தின் முதல் ஷெட்யூல் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஜனவரியில் இரண்டாவது ஷெட்யூல் தொடங்கியது. இடையில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க வேலை நிறுத்தத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு, வேலை நிறுத்தத்துக்குப் பின்னர் பரபரப்பாக நடைபெற்றது.
கடந்த மாதம் முதல் வாரத்தில் தன்னுடைய போர்ஷன் நிறைவு பெற்றதாக அறிவித்தார் அரவிந்த் சாமி. பின்னர், அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஜோதிகா என ஒவ்வொருவர் போர்ஷனாக நிறைவுபெற, நேற்று சிம்புவின் போர்ஷனும் நிறைவு பெற்றுள்ளது. செர்பியாவில் கடைசியாகப் படமாக்கியுள்ளார் மணிரத்னம். இத்துடன் படத்தின் ஷூட்டிங்கும் நிறைவு பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT