Published : 04 May 2018 01:00 PM
Last Updated : 04 May 2018 01:00 PM

நீட் தேர்வு எழுதும் 2 மாணவர்களின் போக்குவரத்துச் செலவை ஏற்பதாக நடிகர் பிரசன்னா அறிவிப்பு

இரண்டு மாணவர்கள் நீட் தேர்வு எழுத உதவி செய்வதாக நடிகர் பிரசன்னா ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு, வருகிற ஞாயிற்றுக்கிழமை (மே 6) நடைபெற இருக்கிறது. தமிழக மாணவர்கள் தேர்வு எழுத கேரளா மற்றும் ராஜஸ்தானில் தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது மாணவர்களுக்கு மிகப்பெரும் சுமையாக அமைந்துள்ளது.

இதற்கு எதிராகப் பலரும் குரல் கொடுத்துவரும் நிலையில், இரண்டு மாணவர்கள் அங்கு சென்று வருவதற்கான செலவைத் தான் ஏற்றுக் கொள்வதாக நடிகர் பிரசன்னா ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

“இரண்டு ஏழை மாணவர்கள் அல்லது அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதற்கான போக்குவரத்துச் செலவை நான் ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன். தேர்வு எழுதும் இடம் மற்றும் ஹால் டிக்கெட் உள்ளிட்ட விவரங்களை எனக்கு அனுப்பவும்” எனத் தெரிவித்துள்ளார் பிரசன்னா.

நீட் தேர்வு எழுத இருக்கும் தமிழக மாணவர்களுக்கு, பிரசன்னாவைப் போல் பலரும் உதவ முன்வந்துள்ளனர்.

 

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

‘இருட்டு அறையில் முரட்டுக்குத்து’ படத்தின் புகைப்படங்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x