Published : 09 Apr 2018 04:33 PM
Last Updated : 09 Apr 2018 04:33 PM

க்யூபுக்கு ‘செக்’ வைத்த விஷால் : புது நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் ஒப்பந்தம்

க்யூப் நிறுவனத்துக்கு ‘செக்’ வைக்கும் வகையில், புது நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது தயாரிப்பாளர் சங்கம்.

க்யூப், யு.எஃப்.ஓ. உள்ளிட்ட டிஜிட்டல் நிறுவனங்களின் அதிக கட்டணத்துக்கு எதிராகக் கடந்த மார்ச் 1 ஆம் தேதியில் இருந்து புதிய படங்களை ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். மேலும், படப்பிடிப்புகள், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள், சினிமா நிகழ்ச்சிகள் என எல்லாமே ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், க்யூப், யு.எஃப்.ஓ. ஆகிய டிஜிட்டல் நிறுவனங்களுக்கு ‘செக்’ வைக்கும் வகையில், ஏரோக்ஸ் என்ற நிறுவனத்துடன் நேற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது தயாரிப்பாளர்கள் சங்கம். டிசிஐ அனுமதி பெற்ற இந்த நிறுவனம், மற்ற நிறுவனங்களைவிட 50 சதவீதம் குறைவாகவே கட்டணம் வசூலிக்கிறது.

தங்களுடைய வாழ்வாதாரத்திற்குப் போராடிவரும் தயாரிப்பாளர்களுக்கு, இது மிக முக்கியமான விஷயமாகும். குறிப்பாக, சிறு படத் தயாரிப்பாளர்களுக்கு இது வரப்பிரசாதமாக இருக்கும் என தயாரிப்பாளர்கள் சங்கம் கருதுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x