Last Updated : 13 Feb, 2018 05:16 PM

 

Published : 13 Feb 2018 05:16 PM
Last Updated : 13 Feb 2018 05:16 PM

தொலைக்காட்சி உரிமம் விற்பனையில் முன்னணி பெறும் சிவகார்த்திகேயன்

தொலைக்காட்சி உரிமம் விற்பனையில் தொடர்ச்சியாக முன்னணி பெற்று வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 24 ஏ.எம் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் தற்போதே கைப்பற்றி இருக்கிறது.

ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களின் படங்களை மட்டுமே படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு அல்லது படப்பிடிப்பு நடைபெறும் போது தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டியிட்டு உரிமையைக் கைப்பற்றும். இந்த வரிசையில் சிவகார்த்திகேயன் படத்தை போட்டியிட்டு வாங்கியுள்ளார்கள். இப்படத்தைப் போன்ற விக்னேஷ் சிவன் - சிவகார்த்திகேயன் இணையவுள்ள படத்தின் தொலைக்காட்சி உரிமையையும் சன் தொலைக்காட்சி கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பொன்.ராம் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். 24 ஏ.எம் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் சமந்தா, சிம்ரன், நெப்போலியன், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன் பிறந்தநாளன்று ஃபர்ஸ்ட் லுக்குடன் படத்தின் பெயரையும் அறிவிக்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இதன் தொலைக்காட்சி உரிமையையும் சன் நிறுவனமே கைப்பற்றியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x