Published : 05 Feb 2018 06:30 PM
Last Updated : 05 Feb 2018 06:30 PM
'லட்சுமி' மற்றும் 'மா' ஆகிய குறும்படங்களின் மூலம் கவனம் ஈர்த்த சார்ஜுன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து விரைவில் வெளியாகவுள்ள படம் 'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்'. இப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவுற்று, வெளியீட்டு தயாராகி வருகிறது.
இப்படத்தை இயக்கிய சார்ஜுன், 'லட்சுமி' மற்றும் 'மா' ஆகிய இரண்டு குறும்படங்களின் மூலம் சமூக வலைதளத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தற்போது மீண்டும் ஒரு புதிய படமொன்றை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
'அறம்' மற்றும் 'குலேபகாவலி' படங்களின் தயாரிப்பாளரான ராஜேஷ் தயாரிக்கவுள்ள இப்படத்தில் நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ள இப்படம் முழுக்க திகலூட்டும் படமாக உருவாகவுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT