Published : 05 Feb 2018 06:01 PM
Last Updated : 05 Feb 2018 06:01 PM

சின்ன பட்ஜெட் படங்களை எடுக்காதீர்கள்; குழி தோண்டி புதைத்துவிடுவார்கள்: விசிறி இயக்குநர் வேதனை

சின்ன பட்ஜெட் படங்களை எடுக்காதீர்கள்; குழி தோண்டி புதைத்துவிடுவார்கள் என்று 'விசிறி' இயக்குநர் வேதனையுடன் குறிப்பிட்டு இருக்கிறார்.

'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்', 'படை வீரன்', 'மதுர வீரன்' மற்றும் 'ஏமாலி' ஆகிய படங்களோடு வெளியான படம் 'விசிறி'. இப்படத்தை 'அரும்பு மீசை குறும்பு பார்வை' மற்றும் 'வெண்ணிலா வீடு' ஆகிய படங்களை இயக்கிய வெற்றி மகாலிங்கம் இயக்கியுள்ளார்.

விஜய் ரசிகர் மற்றும் அஜித் ரசிகர் இருவரும் மோதுகிறார்கள். என்ன நடக்கிறது என்பதே 'விசிறி' படத்தின் கதை. ஆனால், போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று இயக்குநர் வெற்றி மகாலிங்கம் தனது வேதனையை பகிர்ந்திருக்கிறார்.

இது குறித்து வெற்றி மகாலிங்கம் கூறியிருப்பதாவது:

'விசிறி' படத்தை பிப்ரவரி 2-ம் தேதி வெளியிடுகிறோம் என முன்பே திட்டமிட்டு, அதற்கான வேலைகளைத் தொடங்கிவிட்டோம். ஆனால், கடைசி நேரத்தில் பல படங்கள் வெளியானதால், எங்களுக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை. சில படங்களுக்கு திரையரங்குகளில் கூட்டம் குறைவு என்றாலும், எங்களுடைய படத்திற்கு திரையரங்குகள் தர மறுக்கிறார்கள்.

சின்ன படத்துக்கு ஆதரவு அளிப்போம் என பல சங்க நிர்வாகிகள் பேசுகிறார்கள். ஆனால், யாருமே உதவவில்லை. சின்ன பட்ஜெட் படங்களை எடுக்காதீர்கள். உங்களை குழி தோண்டி புதைத்துவிடுவார்கள். விஜய் - அஜித் ரசிகர்கள் மோதல், அதற்கு நல்ல தீர்வு என வித்தியாச முயற்சியில் 'விசிறி' படத்தை எடுத்தேன். நாயகி கூட சம்பளம் வாங்காமலே நடித்துக் கொடுத்தார். ஆனால், போதிய திரையரங்குகள் கிடைக்கவில்லை.''

இவ்வாறு வெற்றி மகாலிங்கம் தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x