Published : 01 Feb 2018 04:16 PM
Last Updated : 01 Feb 2018 04:16 PM

ஜீவா - ஷாலினி பாண்டே நடிக்கும் கொரில்லா: பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘கொரில்லா’. இதில் நடிகர் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ், முனீஸ்காந்த் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டான் சாண்டி.‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சி.எஸ் இசையமைக்கிறார். ரூபன் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். வெற்றி மகேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். கொள்ளையை மையமாகக் கொண்டு உருவாகும் இந்த நகைச்சுவைப் படத்தில் சிம்பன்சி குரங்கு ஒன்றும் நடிக்கிறது. இந்தியாவில் நடிகர் ஒருவருடன் சிம்பன்சி குரங்கு நடிப்பது இது தான் முதன்முறை. 

இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு இன்று பாண்டிசேரியில் பூஜையுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒரு மாதம் தாய்லாந்தில் படப்பிடிப்பு தொடரவிருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டிருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

கோடை விடுமுறையில் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் ‘கொரில்லா ’ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x