Published : 16 May 2016 02:22 PM
Last Updated : 16 May 2016 02:22 PM

100 சதவீத வாக்குப்பதிவு: அனிருத் அழைப்பு

மக்கள் 100 சதவீத வாக்களிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று இசையமைப்பாளர் அனிருத் கூறியுள்ளார்.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சென்னையில் தனது தந்தை ரவிசந்திரனுடன் அனிருத் தனது வாக்கினை பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அனிருத், "இது நான் வாக்களிக்கும் 2வது தேர்தல். எப்போது தேர்தல் நடந்தாலும் அதில் 100% வாக்கு அளிக்க வேண்டும் என்பது என் விருப்பம். அது அனைவருக்குமே இருக்க வேண்டும் என விரும்புகிறேன்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x