Published : 08 Nov 2016 12:35 PM
Last Updated : 08 Nov 2016 12:35 PM
சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் 'அச்சம் என்பது மடமையடா' படத்துக்கு தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைத்திருக்கிறது.
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் 'அச்சம் என்பது மடமையடா'. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை ஒன்றாக எண்டர்டெயின்மண்ட் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் கெளதம் மேனன்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு பல முறை ஒத்திவைக்கப்பட்டது. தற்போது நவம்பர் மாதத்தில் வெளியிட படக்குழு இறுதிகட்ட பணிகளைத் துரிதப்படுத்தியது.
அனைத்து பணிகளும் முடிவுற்று, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. தணிக்கையில் 'யு' சான்றிதழ் கிடைக்கவே, நவம்பர் 11ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக 'அச்சம் என்பது மடமையடா' படக்குழு அறிவித்திருக்கிறது.
இப்படத்தின் வெளியீடு முடிவானதைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் உருவாகி வரும் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் இயக்குநர் கெளதம் மேனன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT