Last Updated : 31 Jan, 2017 11:52 AM

 

Published : 31 Jan 2017 11:52 AM
Last Updated : 31 Jan 2017 11:52 AM

பிப்ரவரி 24-ல் வெளியாகிறது நெஞ்சம் மறப்பதில்லை

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கும் 'நெஞ்சம் மறப்பதில்லை' பிப்ரவரி 24ம் தேதி வெளியாகவுள்ளது.

'கான்' படம் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா நடிக்க 'நெஞ்சம் மறப்பதில்லை' என்ற படத்தை தொடங்கினார் இயக்குநர் செல்வராகவன். ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் எஸ்.ஜே.சூர்யாவுடன் நடித்துள்ளார்கள்.

ஈ.சி.ஆர் சாலையில் உள்ள பங்களாவில் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிவுள்ள முதல் பேய் படம் இதுவாகும்.

இப்படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து பின்னணி இசைக் கோர்ப்பு பணிகளை முடித்து தணிக்கைக்கு விண்ணப்பித்துள்ளது படக்குழு. மேலும், இப்படம் வெளியாவதற்கு முன்பே பின்னணி இசையை அதிகாரப்பூர்வமாக வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இப்படத்தை பிப்ரவரி 24ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. தணிக்கை பணிகள் முடிந்தவுடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளார்கள்.

'நெஞ்சம் மறப்பதில்லை' படத்தைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடிக்கும் 'மன்னவன் வந்தானடி' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் செல்வராகவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x