Published : 09 Jul 2017 11:15 AM
Last Updated : 09 Jul 2017 11:15 AM

நன்னிலம் அருகே நல்லமாங்குடியில் இன்று கே.பாலசந்தர் சிலை திறப்பு விழா: கமல்ஹாசன் பங்கேற்கிறார்

மறைந்த திரைப்பட இயக்குநர் கே.பால சந்தரின் பிறந்த நாளையொட்டி அவரது சிலை திறப்பு விழா இன்று (ஜூலை 9) மாலை அவரது சொந்த ஊரான திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த நல்லமாங்குடியில் உள்ள குரு நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.

விழாவில் நடிகர் கமல்ஹாசன், இயக்குநர்கள் மணிரத்னம், வசந்த் சாய், கவிஞர் வைரமுத்து, திரைப்படத் தயாரிப்பாளர் பிரமிட் நட்ராஜன், ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். விழா ஏற்பாடுகளை கவிஞர் வைரமுத்து மற்றும் அவரது நண்பர்கள், ரசிகர்கள் செய்துள்ளனர். விழாவில், பாலசந்தரின் மனைவி ராஜம் பாலசந்தர் மற்றும் குடும்பத்தினர் பங்கேற்கின்றனர்.

இயக்குநர் பாலசந்தர் தனது சொந்த ஊரான நல்லமாங்குடியில் இருந்து கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பே சென்னை சென்றுவிட்டார். அதன்பிறகு, அவர் வசித்த வீடு விற்கப்பட்டுவிட்ட நிலையில், அந்த வீடு இருந்த இடத்தில் தற்போது தனியார் பள்ளி உள்ளது. அங்குதான், பாலசந்தரின் சிலை திறப்பு விழா நடைபெற உள் ளது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x