Published : 01 Jan 2017 05:21 PM
Last Updated : 01 Jan 2017 05:21 PM
விஷால் அணியிலிருந்து, தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு குஷ்பு போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி முதல் வாரத்தில், தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் விஷால் தரப்பிலிருந்து போட்டியிடுவோம் என்று அறிவித்திருந்தார்கள்.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டி என அறிவிக்கப்பட்டதில் இருந்து விஷாலுக்கும், தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கும் அறிக்கைப் போர் நடைபெற்று வருகிறது.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில், தயாரிப்பாளர்கள் பல்வேறு அணிகளாக பிரிந்து விவாதம் நடத்தி வருகிறார்கள். தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் நீக்கப்பட்டுள்ளதால், அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு விஷால் தலைமையில் பல தயாரிப்பாளர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில், தேர்தலில் போட்டியிடுவது யார், என்னவெல்லாம் வாக்குறுதிகள் அளிக்க முடியும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டை முன்னிட்டு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள். 2017ம் ஆண்டு சமூகத்துக்கு பல நல்ல விஷயங்கள் செய்வதாக அமையவேண்டும். அந்த வகையில் குஷ்பு தலைவராக போட்டியிடுவார்" என்று தெரிவித்துள்ளார். விஷால் தரப்பிலிருந்து, குஷ்பு அறிவிக்கப்பட்டுள்ளது திரையுலகில் பலரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தேர்தலில் தயாரிப்பாளர் தாணு தலைமையில் ஒரு அணியும், டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட இருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT