Last Updated : 18 Jan, 2017 01:12 PM

 

Published : 18 Jan 2017 01:12 PM
Last Updated : 18 Jan 2017 01:12 PM

ஜல்லிக்கட்டு போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும்: விக்ரம் நம்பிக்கை

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்தப்பட்டு வரும் போராட்டங்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்று விக்ரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் என்று பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

இளைஞர்கள் ஒன்றுகூடி நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்துக்கு திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்துக்கு விக்ரம் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக விக்ரம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"தமிழர்களின் பாரம்பரிய வீரவிளையாட்டு ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பது எனது ஆசை, எண்ணம்.

அதற்காக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தும் அனைத்து தமிழர்களுக்கும் குறிப்பாக அனைத்து மாணவ, மாணவியருக்கும் எனது நெஞ்சார்ந்த முழு ஆதரவு. இந்தப் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை" என்று விக்ரம் தெரிவித்துள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x