Last Updated : 18 Jan, 2017 03:40 PM

 

Published : 18 Jan 2017 03:40 PM
Last Updated : 18 Jan 2017 03:40 PM

சூர்யாவின் அறிக்கை தற்செயலானது அல்ல: பீட்டா உறுப்பினர் தகவல்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சூர்யா விடுத்துள்ள அறிக்கை தற்செயலானது அல்ல என்று பீட்டா உறுப்பினர் நிகுன்ஜ் சர்மா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

இளைஞர்களின் இப்போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். சூர்யாவின் இந்த அறிக்கை பீட்டா அமைப்பின் கவனத்தைப் பெற்றது.

சூர்யாவின் அறிக்கை குறித்து பீட்டாவை சேர்ந்த நிகுன்ஜ் சர்மா "சூர்யாவின் 'சிங்கம் 3' படத்தின் வெளியீட்டுக்கு முன் சரியாக அவர் பேச முடிவெடுத்திருப்பது தற்செயலானது அல்ல.

சமீபத்தில் சட்டவிரோதமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளில் மாடுகளும், மனிதர்களும் இறந்துள்ளனர். தொடர்ந்து மரணத்தையும், காயங்களையும் தரும் ஒரு குரூரமான நிகழ்ச்சி. அதை நீதிமன்றம் கண்டித்துள்ளது. அதை வைத்து தனது திரைப்படத்துக்கான விளம்பரத்தைத் தேடுவது மலிவான செயலாகும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x