Published : 18 Jan 2017 08:44 PM
Last Updated : 18 Jan 2017 08:44 PM
எங்கள் உரிமைகளைத் திரும்பக் கொடுங்கள் என்று பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு ஜி.வி.பிரகாஷ் காட்டம்
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள்.
இளைஞர்கள் ஒன்றுக்கூடி நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்துக்கு திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இப்போராட்டம் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பல்வேறு திரையுலகினர் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இக்கருத்துக்களில் பிரதமர் மோடியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு ஜி.வி.பிரகாஷ், "எங்கள் உரிமைகளை திரும்பக் கொடுங்கள். எங்களுக்கு ஜல்லிக்கட்டு வேண்டும். ஒவ்வொரு தமிழ் குடிமகனுக்கும் வேண்டும். இதை நீங்கள் கண்டிப்பாக நிராகரிக்க முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT