Published : 09 Sep 2018 09:30 AM
Last Updated : 09 Sep 2018 09:30 AM

மீண்டும் 3 மொழிகளில் பிரபாஸ் படம்

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ், ‘பாகுபலி’ படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகும் ‘சாஹூ’ படத்தில் நடித்துள்ளார். தற்போது அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இப்படத்தை கே.கே.ராதாகிருஷ்ண குமார் இயக்குகிறார். ‘பாகுபலி’. ‘சாஹூ’ படங்கள் போல இந்த படமும் தமிழ் தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் உருவாகிறது. அதிக பொருட்செலவு, பல்வேறு நாடுகளில் விதவிதமான லொக்கேஷன்கள் என பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் கதாநாயகியாக  பூஜா ஹெக்டே நடிக்கிறார். ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா, இசையமைப்பாளராக அமித் திரிவேதி, படத்தொகுப்பாளராக கர் பிரசாத், புரொடக்சன் டிசைனராக ரவீந்தர் என பல பிரபலங்களும் இப்படத்தில் இணைகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x