Published : 21 Nov 2018 09:08 AM
Last Updated : 21 Nov 2018 09:08 AM

திரை விமர்சனம்: திமிரு புடிச்சவன்

போலீஸ் ஏட்டாக பணி யாற்றுபவர் விஜய் ஆண்டனி. தன் தம் பியை போலீஸ் அதிகாரி யாக்க வேண்டும் என்று வெறித் தனமாக பயிற்சி அளிக்கிறார். இது பிடிக்காமல் வீட்டைவிட்டு ஓடும் அவன், சென்னைக்கு சென்று குற்றவாளியாக உரு வெடுக்கிறான். பதவி உயர்வில் எஸ்.ஐ.யாகி, சென்னை வரும் விஜய் ஆண்டனி, தம்பியை என்கவுன்ட்டரில் கொன்றுவிட்டு இன்ஸ்பெக்டர் ஆகிறார். போலீ ஸார் செய்யும் தவறுகளை நிறுத்தி, அவர்களையும் திருத்தி, காவல்துறை மீது மக்களுக்கு மரியாதையை ஏற்படுத்துகிறார்.இதற்கிடையில், தன் தம்பிபோல பல சிறுவர்களை மூளைச் சலவை செய்து, குற்றச்செயல்களில் ஈடுபடுத்துவது பெரிய ரவுடியான சாய் தீனா என்று தெரிகிறது. சிறார் குற்றவாளிகளை திருத்த முடிவெடுக்கிறார். அதில் சாதிக் கிறாரா என்பது மீதிக் கதை.

வழக்கமான போலீஸ் - ரவுடி கதையில் சிறார் குற்றவாளிகள், அவர்கள் குற்றச் செயல்களுக்கு ஈர்க்கப்படுவதற்கான காரணங் கள் ஆகியவற்றை சேர்த்து வித்தியாசம் காட்டியிருக்கிறார் இயக்குநர் கணேஷா. தெருவுக்கு நாலு சிறுவர்கள் தடம்மாறி திரியும் இந்த காலத்தில், இது அவசிய மான களம்தான். அவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க வேண்டும் என்று குரல் எழுப்பா மல், புதுவிதமாக சிந்தித்திருப் பதும் பாராட்டுக்குரியது.

இவ்வாறு, கதை அளவில் பாராட்டத்தக்க அம்சங்கள் பல இருந்தாலும் திரைக்கதை, பட மாக் கம் சொதப்பல். நாயகனின் நோயைப் பற்றி தெரிந்துகொண்ட தாலேயே காவல்துறை அதிகாரி கள் எல்லோரும் திருந்தி விடுகிறார்கள். இதுபோல, அழுத்த மான காரணங்கள், வலுவான திருப்பங்கள் இல்லாமல் பல காட்சிகள் நகர்கின்றன.

சிறார்களில் ஒருவனது அப்பா முருக பக்தர், இன்னொருவனின் அப்பா முஸ்லிம், கதாநாயகியின் அப்பா கிறிஸ்தவர். இது மதநல் லிணக்கத்தை காட்ட வேண்டும் என்பதற்கான திணிப்பு என அப்பட்டமாக தெரிகிறது.

சாக்கடை அடைப்பை போலீஸே இறங்கி நீக்குவது, நீண்ட வசனம் பேசி மக்களை திருத்துவது, கண்ணியமாக நடந்துகொண்டு, மக்களின் நம் பிக்கையைப் பெறுவது போன்ற காட்சிகள், படத்தில் காமெடி இல் லாத குறையைத் தீர்க்கின்றன.

பதவி உயர்வு கிடைக்காத விரக்தியில் இருக்கும் தலைமைக் காவலரை தேசியக்கொடி ஏற்ற வைத்து கவுரவப்படுத்துவது, முருகனுக்கு மாலை போட்டிருக் கும் விஜய் ஆண்டனி யாரை யும் அடிக்க முடியாத நிலையில், ஆசிட் தாக்குதலில் இருந்து ஒரு பெண்ணைக் காப்பாற்றுவது என்று ஆங்காங்கே சில காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. திருநங்கை கதாபாத்திரத்தை காவல்துறை அதிகாரியாக கண்ணியமாக சித் தரித்து, படம் முழுவதும் அவருக்கு முக்கியத்துவம் அளித்திருப்பதும் சிறப்பு.

இதுவரை கதையின் நாயக னாக நடித்துவந்த விஜய் ஆண் டனி, இந்த படம் மூலம் தன்னை ஒரு மாஸ் நாயகனாக முன் னிறுத்த முயற்சித்திருக்கிறார். நடிக்கத் தேவையில்லாத காட்சி கள், சண்டைக் காட்சிகளில் ஓரளவு தேறியும் விடுகிறார். சென்டி மென்ட், உணர்ச்சிவசப்பட்டு வச னம் பேசும் இடங்களில்தான் பார்வையாளர்களை சோதிக்கிறார்.

சென்னை தமிழ் பேசும் காவல் அதிகாரியாக கதாநாயகி நிவேதா பெத்துராஜ். விஜய் ஆண்டனியை காதலித்துக்கொண்டே, சமயம் கிடைக்கும்போதெல்லாம் அவ ருக்கு பல்பு கொடுத்தும், சில இடங்களில் பல்பு வாங்கியும் ரசிக்க வைக்கிறார்.

விஜய் ஆண்டனியின் தம்பி உள்ளிட்ட இளம் சிறார்களின் மிகை நடிப்பு மகா எரிச்சல்.

விஜய் ஆண்டனி இசையில் ‘நக நக நக’ பாடல் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது. முருகக் கடவுளுக்கு இணையாக சித் தரிக்கப்படுவதால் பார்க்கத்தான் முடியவில்லை.

மொத்தத்தில் ஓரளவு நல்ல கதை, ரசிக்கத்தக்க சில ஐடியாக் களை மட்டுமே நம்பி எடுக்கப் பட்ட படம். ‘பிச்சைக்காரனை’ நம்பிப் போனவர்களை இவன் ஏமாற்றிவிட்டான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x