Published : 09 Jul 2019 05:41 PM
Last Updated : 09 Jul 2019 05:41 PM

மீண்டும் சர்ச்சையில் கங்கணா: பத்திரிகையாளரிடம் வாக்குவாதம்

தனது படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் நடிகை கங்கணா ரணாவத்.

'ஜட்ஜ்மென்டல் ஹாய் க்யா' என்ற திரைப்படம் ஜூலை 26 அன்று திரைக்கு வரவுள்ளது. இதில் கங்கணா ரணாவத்தும், ராஜ்குமார் ராவும் நடித்துள்ளனர். ஏக்தா கபூர் தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது.

இதில் கலந்துகொண்ட ஜஸ்டின் ராவ் என்ற பத்திரிகையாளரின் கேள்விக்கு கங்கணா சரியாக பதில் சொல்லாமல், தனது 'மணிகர்னிகா' படத்துக்கு ஜஸ்டின் கடுமையான விமர்சனம் எழுதினார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஆனால் ஜஸ்டினோ அந்தப் படம் குறித்து நான் எதுவுமே பேசியதில்லை என்று சொல்ல, பதிலுக்கு கங்கணா, தேசப்பற்று குறித்த படம் எடுத்ததற்கு என்னை வெறி பிடித்தவர் என்று கூறுகிறார்கள் என்று பேச இது பெரிய விவாதமாக மாறியது.

தொடர்ந்து ஜஸ்டின், படம் குறித்து தான் எதுவுமே பேசியதில்லை என்றும், பெரிய அந்தஸ்தில் இருந்துகொண்டு தன்னை கங்கணா மிரட்டக்கூடாது என்றும் பதில் சொன்னார். 

ஜஸ்டினைப் பேச விடாமல் நிகழ்ச்சியை நடத்தியவர்கள் தடுக்க, சக பத்திரிகையாளர் ஒருவர் சத்தமாக விவாதம் செய்ய ஆரம்பித்தார். தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தலையிட்டு அனைவரும் அமைதியாக இருக்கும்படி கோரிக்கை வைத்தார்.

தொடர்ந்து பேசிய கங்கணா, தான் யாரையும் அச்சுறுத்தவில்லை என்றும், பொதுவாக தன்னைப் பற்றிய செய்திகள் குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் கூறினார்.  மேலும் ஜஸ்டினை தனக்கு முன்னமே தெரியும் என்றும், ஒரு பேட்டிக்காக வந்திருந்தபோது 3 மணி நேரம் உரையாடி இருவரும் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டோம் என்றும் கூற இதையும் ஜஸ்டின் மறுத்து அதற்கான ஆதாரத்தைக் கேட்க கங்கணா ஆதாரம் இருக்கிறது தருகிறேன் என்றார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு மூத்த பத்திரிகையாளர் சேர்ந்து ஏக்தா கபூர் மற்றும் கங்கணாவிடம் மன்னிப்பு கோரவுள்ளார்கள் என்று செய்திகள் வந்துள்ளன. ஆனால் கங்கணா யாரிடமும் மன்னிப்பு கேட்கமாட்டார் என்று கூறியுள்ளார். மேலும்  கங்கணா குறித்து ஜஸ்டின் ராவ் பகிர்ந்த ட்வீட்டுகளையும் குறிப்பிட்டுப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x